fbpx

ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகப் பேச்சாளராக உமாச்சந்திரா பிரகாஷ் நியமனம்

ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகப் பேச்சாளராக (தமிழ்) உமாச்சந்திரா பிரகாஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாசவால் நேற்றைய தினம் (29.12.2022) நியமிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு – எதுல்கோட்டையில் அமைந்துள்ள கட்சியின் அலுவலகத்தில் வைத்து இன்று இந்த நியமனக் கடிதம் வழங்கப்பட்டுள்ளது

ஐக்கிய மக்கள் சக்தியின் உதவி செயலாளர்களில் ஒருவராகவும், ஐக்கிய மகளிர் சக்தியின் பிரதித் தலைவராகவும்,எதிர்க்கட்சித் தலைவரின் ஒருங்கிணைப்புச் செயலாளராகவும் இவர் கடமையாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

Back to top button