fbpx

பாடசாலை காதல் தொடர்ந்ததால் நேர்ந்த விபரீதம் : 10 வயது மகனையும் அடித்து கொன்று விட்டு தானியம் தற்கொலை!

இலங்கையில் பாடசாலை காதலியான குடும்பப் பெண்ணையும், அவரது 10 வயது மகனையும் கொன்று விட்டு, காதலனும் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் கல்கமுவ, மஹா நன்னேரியா பகுதியின் பிறப்பகுளத்தில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் கடற்படை உத்தியோகத்தர் ஒருவரின் மனைவியான இந்திகா சாந்தி (28), அவரது 10 வயது மகன், .பாடசாலை காதலனான துஷார குமார (28) ஆகியோரின் சடலங்கள் வீட்டிலிருந்து மீட்கப்பட்டன.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

பொல்பித்திகம பகுதியில் வசிக்கும் இந்திகா, சில மாதங்களுக்கு முன்பு கணவன் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் மகாநன்னேரிய பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டுக்கு குடிபெயர்ந்துள்ளார்.

இந்திகா சாந்தி தனது 18வயதில் மொரகொல்லாகம பகுதியில் வசிக்கும் கடற்படை உத்தியோகத்தரை திருமணம் முடித்த நிலையில், அவர் தற்போது வெலிசர முகாமில் பணிபுரிந்து வருவதாக தெரியவருகிறது. இந்நிலையில் இந்திகாவிற்கு பாடசாலை காதல் இருந்ததாகவும் அது திருமணத்தில் முடியவில்லை எனவும் கூறப்படுகின்றது.

நன்னேரியாவில் வசிக்கும் துஷார குமார என்பவரே இந்திகாவின் பாடசாலைக் காதலன் என சொல்லப்படுகின்றது. இந்நிலையில் இந்திகா திருமணம் முடித்து, இரண்டு பிள்ளைகளின் தாயானாலும், பாடசாலை காதலை கைவிடவில்லை என்ரும் கணவன் வேலைக்கு சென்ற பின்னர், இருவரும் சந்தித்துக் கொண்டனர்.

தனது சட்டபூர்வ கணவர் பணிக்கு சென்ற பின்னர், பாடசாலை காதலனுடன் உறவில் இருந்ததாகவும், அவர்கள் தங்கள் உறவை பகிரங்கமாக வைத்திருந்ததாகவும் கூறப்படுகின்றது.

இது, கணவனிற்கு தெரியவந்ததை அடுத்து குடும்பத்திற்குள் பிரச்சனையாகி இந்த விவகாரம் கல்கமுவ பொலிஸ் நிலையம் வரை சென்றதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கடந்த 7 ம் திகதி காலை உறக்கத்திலிருந்து எழுந்த இந்திகாவின் 5 வயதான இளைய மகன் அருகில் உள்ள வீட்டிற்கு சென்று தனது தாயும் சகோதரனும் அசையாமல் படுத்திருப்பதாக தெரிவித்துடன் அண்ணனின் தலையிலிருந்து இரத்தம் வருவதாகவும் கூறியுள்ளார்.

இதனையடுத்து பக்கத்து வீட்டு பெண் இந்திகாவின் தொலைபேசிக்கு அழைப்புகளை எடுத்தபோது அவர் பதிலளிக்காததனால் அயல்வீட்டினர் உடனடியாக பொலிசாருக்கு தகவல் வழங்கி நிலையில் பொலிசார் வீட்டை சோதனையிட்டதில் 3 பேரின் சடலங்களை மீட்டனர்.

தாயும், மகனும் கழுத்து நெரிக்கப்பட்டு, தலையில் அடிக்கப்பட்டு கொல்லப்பட்ட நிலையில் பாடசாலை காதலன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுவதுடன், சம்பவ இடத்தில், பாடசாலை காதலனின் கைத்தொலைபேசியும், அவரால் எழுதப்பட்ட சிறிய குறிப்பும் காணப்பட்டுள்ளது.

இந்நிலையில் சந்தேகநபர் இந்திக்காவுடன் மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து அவரையும் குழந்தையையும் 7 ஆம் திகதி அதிகாலை 1 மணியளவில் கொன்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இதேவேளை சந்தேக நபரால் எழுதப்பட்ட குறிப்பில், தாயாரை கவனித்துக் கொள்ளும்படி தனது சகோதரனுக்கு அவர் எழுதியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.

Back to top button