fbpx

15 வயதுடைய காதலியின் வீட்டிற்குள் படுக்கையின் அடியில் இருந்த காதலன்q

15 வயதுடைய காதலியின் வீட்டிற்குள் நுழைந்து படுக்கையின் அடியில் இருந்த காதலனை பெற்றோர் நையப்புடைத்த சம்பவம் ஒன்று கல்கிரியாகம பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

காதலனை நையப்புடைத்த சிறுமியின் தந்தை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார் . மின்துண்டிக்கப்பட்ட சமயத்தில் காதலியுடன் உல்லாசமாக இருந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

15 வயதான சிறுமிக்கும், இளைஞருக்குமிடையில் சிறுமியின் தாயாரின் கைத்தொலைபேசியில் காதல் உறவை வளர்த்து வந்த நிலையில் அதனை கண்டு பிடித்த தாயார் காதல் உறவை நிறுத்துமாறு சிறுமியை எச்சரித்துள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை சிறுமியின் வீட்டிற்குள் இரகசியமாக நுழைந்த சந்தேக நபர் மின்சாரம் துண்டிக்கப்படும் வரை சிறுமியின் படுக்கைக்கு அடியில் பல மணிநேரம் தங்கியிருந்துள்ளார்.

இரவு, 9:00 மணியளவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதையடுத்து கட்டிலில் காதலியுடன் இருந்துள்ளார். அதன்பின்னர் மீண்டும் 10 மணியளவில் மின்சாரம் வந்ததையடுத்து மீண்டும் படுக்கைக்கு அடியில் சென்றதாக பொலிஸாரிடம் காதலன் தெரிவித்துள்ளனர்

இந்நிலையில் அதிகாலை 3 மணியளவில் சிறுமியின் தந்தைக்கு விழிப்பு ஏற்பட்டு தண்ணீர் குடிக்க வந்த போது சிறுமியின் படுக்கை அறைக்குள் சத்தங்கள் கேட்டதையடுத்து சந்தேகமடைந்த தந்தை, சிறுமியின் அறைக்குள் தேடுதல் நடத்திய போது மறைந்திருந்த காதலன் கண்டுபிடிக்கப்பட்டார்.

அவரை நையப்புடைத்த சிறுமியின் தந்தை கதிரையில் கட்டி வைத்து விட்டு இளைஞனின் பெற்றோருக்கும் பொலிசாருக்கும் தகவல் வழங்கினார். தகவலையடுத்து இளைஞனின் பெற்றோர் அங்கு வந்த பின்னர் பொலிசாரிடம் காதலன் ஒப்படைக்கப்பட்டதாக கூறப்படுகின்றது

Back to top button