fbpx

12 வயது மாணவி வன்புணர்வு:பாடசாலை அதிபர் கைது

12 வயதுடைய பாடசாலை மாணவியை பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் காலியில் உள்ள பாடசாலை ஒன்றின் பிரதி அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் தனது வீட்டில் நடத்தும் வகுப்பில் கலந்துகொண்ட மாணவிகளில் ஒருவரே இவ்வாறு வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

வகுப்பு முடிந்து சகோதரிக்காக காத்திருந்த வேளை
வகுப்பு முடிந்து ஏனைய பிள்ளைகள் சென்ற நிலையில் குறித்த மாணவி தனது சகோதரிக்காக காத்திருந்த நிலையில் சந்தேகநபர் சிறுமியை பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மதியம் 12.30 மணியளவில் வகுப்பு முடிந்ததும் தன்னை அறைக்கு அழைத்துச் சென்று தேநீர் அருந்தி உபசரித்து வன்புணர்விற்கு உட்படுத்தியதாக பாதிக்கப்பட்ட மாணவி காவல்துறையிடம் தெரிவித்துள்ளார்.

அத்துடன் சந்தேக நபர் மாணவியின் மார்பகங்களையும் புகைப்படம் எடுத்துள்ளார்.

Back to top button