fbpx

விபச்சாரத்தை தடுக்க மசாஜ் நிலையங்களுக்கு கட்டுப்பாடு

ஆயுர்வேதத் திணைக்களத்தினால் ஆயுர்வேதக் சட்டக் குறியீடு ஒன்று தயாரிக்கப்பட்டு வருகின்றது இதன்மூலம் பெண்கள் மட்டும் பெண்களுக்கு மசாஜ் செய்வதற்கும், ஆண்களுக்கு ஆண்கள் மட்டும் மசாஜ் செய்வதற்கும் சட்டங்கள் விரைவில் இயற்றப்படவுள்ளது.

இந்த வரைவு இறுதி செய்யப்பட்டவுடன் அமைச்சரவையின் ஒப்புதலுக்குப் பின்னர் ஆயுர்வேதக் குறியீடு அரச வர்த்தமாணியில் வெளியிடப்படும் என்று திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் இயங்கி வரும் பெரும்பாலான ஆயுர்வேத ஸ்பாக்கள் உரிமத்தை தவறாக பயன்படுத்தி ஸ்பா என்ற போர்வையில் விபச்சார விடுதிகளை நடத்தி வருவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

ஆயுர்வேத ஸ்பாக்களுக்கான உரிமம் வழங்குவதை திணைக்களம் தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது மற்றும் சட்ட வரைவு வர்த்தமானியில் வெளியிடப்பட்டதும், ஸ்பாக்களின் செயல்பாடு ஒழுங்குபடுத்தப்படும்.

தொழில்முறை அறிவு மற்றும் பயிற்சிக்குப் பிறகு சிகிச்சையாளர்கள் ஆயுர்வேதத் துறையில் பதிவு செய்ய வேண்டும்.

Back to top button