fbpx

வவுனியா தம்பதி படுகொலை – பெண் கிராம உத்தியோகத்தருடனான கள்ள காதல் காரணம்?

வவுனியா தோணிக்கல் பகுதியில் வீடொன்றுக்கு தீ வைத்து தம்பதி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மேலும் பல தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

கடந்த மாதம் 23ஆம் திகதி இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் வெளியான திடுக்கிடும் தகவல்கள் வருமாறு,

இந்தக் கொலையை ஒப்பந்த அடிப்படையில் செய்துள்ளமை தெரியவந்துள்ளது. அதன்படி இன்று பிற்பகல் வவுனியா வைரவ புளியங்குளம் குளத்தில் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட சில வாள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இச்சம்பவத்தில் உயிரிழந்த நபருக்கு அந்த பகுதியில் உள்ள திருமணமான பெண் கிராம உத்தியோகத்தர் ஒருவருடன் தொடர்பு இருப்பது தற்போது தெரியவந்துள்ளது.

கிராம உத்தியோகத்தருக்கு மற்றொரு திருமணமான நபருடன் தொடர்பு

இந்நிலையில், விசாரணையில், கிராம உத்தியோகத்தருக்கு அதே பகுதியை சேர்ந்த மற்றொரு திருமணமான நபருடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

மேலும் திருமணத்திற்கு புறம்பான உறவில் ஈடுபட்ட இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் ஒருவருக்கு இந்த கொலையை செய்ய ஒப்பந்தம் கிடைத்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறித்த நபர் தற்போது பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதுடன், அவரைக் கண்டுபிடிக்க விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன

Back to top button