fbpx

யாழ். கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரிக்கான நேர்முகத் தேர்வு

யாழ். கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரிக்கான நேர்முகத் தேர்வு இம்மாதம் 25 – 29 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இடம்பெறும் என யாழ். கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியின் பீடாதிபதி சுப்ரமணியம் பரமானந்தம் தெரிவித்தார்.

இலங்கை முழுவதும் உள்ள தேசிய கல்விக் கல்லூரிகளுக்கான புதுமுக மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான நேர்முகத் தேர்வு இம் மாதம் தை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் மாசி மாதம் மூன்றாம் திகதி வரை இடம்பெறும் என உயர் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இந் நிலையில் யாழ் கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரிக்கான நேர்முகத் தேர்வு மேற் குறித்த திகதிளில் இடம்பெறும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Back to top button