fbpx

இலங்கையில் மூன்று ஆண்டுகளில் 9700 பேர் தற்கொலை!

கடந்த 2022 ஆம் ஆண்டில் மாத்திரம் 3 ஆயிரத்து 406 பேர் தற்கொலை செய்துக்கொண்டுள்ளதுடன் அவர்களில் 2 ஆயிரத்து 832 பேர் ஆண்கள்.
இலங்கையில் கடந்த மூன்று ஆண்டுகளில் 9 ஆயிரத்து 700 பேர் தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக புள்ளிவிபரங்களை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள ஆய்வறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது என பேராதனை பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்துள்ளார்.

கடந்த 2022 ஆம் ஆண்டில் மாத்திரம் 3 ஆயிரத்து 406 பேர் தற்கொலை செய்துக்கொண்டுள்ளதுடன் அவர்களில் 2 ஆயிரத்து 832 பேர் ஆண்கள் எனவும் அது 83 சத வீதம் எனவும் அவர் கூறியுள்ளார்.

பொருளாதார சிரமங்கள் காரணமாக கடந்த 2022 ஆம் ஆண்டில் 192 பேர் தற்கொலை செய்துக்கொண்டுள்ளனர்.

குடும்ப பிரச்சினைகள் காரணமாக 593 பேர் தற்கொலை செய்துக்கொண்டுள்ளனர் எனவும் பேராசிரியர் வசந்த அத்துகோரள மேலும் கூறியுள்ளார்.

Back to top button