fbpx

ஆற்றில் குதித்த இரண்டு பிள்ளைகளின் தாய்

பலாங்கொடை பிரதேசத்தை சேர்ந்த பெண், எல்பிட்டிய, உரகஸ்மன்ஹந்தி பிரதேசத்தை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்துள்ள நிலையில், இருவருக்கும் இடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

நேற்று ஞாயிற்றுக் கிழமை பிற்பகல் அவர் தனது இரு பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு பெந்தர பாலத்தில் விட்டுவிட்டு சுமார் 40 அடி உயரத்தில் இருந்து ஆற்றில் குதித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நீரில் அடித்துச் சென்ற பெண்ணை அருகில் நீர் விளையாட்டில் ஈடுபட்டிருந்த இளைஞன் ஒருவர் காப்பாற்றியுள்ளார்.

பின்னர் பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண் மேலதிக சிகிச்சைக்காக கராப்பிட்டிய போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

மேலும், அவரது இரண்டு பிள்ளைகளும் அளுத்கம பொலிஸின் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தின் அதிகாரிகளின் பாதுகாப்பில் இருப்பதுடன்இ அவர்கள் களுத்துறை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் சிறுவர் பராமரிப்பு மையத்திற்கு வைக்கப்படவுள்ளனர்.

குறித்த பெண் தனது இரண்டு பிள்ளைகளுடன் கணவர் வசிக்கும் எல்பிட்டிய பகுதிக்கு சென்று கொண்டிருந்த போது, வீடு திரும்ப வேண்டாம் என குறித்த பெண்ணுக்கு தொலைபேசி மூலம் அவரது கணவன் கூறியதை தொடர்ந்து குறித்த பெண் இவ்வாறு தற்கொலைக்கு முயற்சியத்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

Back to top button