fbpx

நிழல் சொன்ன நிஜம் – ஒரு பக்க கதை

வழமை போலவே ஒரு ஜோக்கிங் போகலாம்னு, வீட்டுக்கு அருகில் இருந்த பூங்காவிற்கு சென்றேன். இதமான மாலை நேரம். வேலை முடிந்து வீடு திரும்பும் அலுவலகர் போல, கொஞ்சம் கொஞ்சமாக மறைந்துகொண்டிருந்த சூரியனோடு, அவ்வளவு நேரம் என்னோடு சேர்ந்து ஜோக்கிங் செய்த என் நிழலும் போக ஆரம்பித்தது. நான் அருகிலிருந்த பெஞ்சில் அமந்துவிட்டேன். எனக்குள் ஒரு கேள்வி,” நா தனியா தானே இங்க வந்தேன், இந்த நிழலை நான் கூப்பிடவே இல்லையே, அதுவாக வந்தது இப்போ அதுவாகவே போகுதே, இது நியாயமா?” என்று.

அப்போது, ஒரு மெல்லிய புன்னகையுடன், நிழல் என்னிடம் இப்படி சொல்ல ஆரம்பித்தது, ” உண்மை தான் நீ என்னை அழைக்கவில்லை, என்னை எதிர்பார்க்கவும் இல்லை. இருந்தாலும் இந்த பூமியில் ஒளி இருக்கும்வரை நான் உன்னோடு பயணிப்பேன், நீ எங்கு சென்றாலும் உன்னோடு நானும் வருவேன். நீ வீழும் போது உன்னோடு உடன் வீழ்வேன். உன் புன்னகை கண்ணீர் என அனைத்திலும் நான் இருப்பேன். ஆனால் இருள் உன்னை வந்தடையும் அந்த நொடியே நான் உன்னை விட்டு விலகி விடுவேன். அதற்கு பின் நீ மட்டும் தான், நான் இல்லை. என்னதான் நான் உன் நிழலாக இருந்தாலும் கடைசிவரை என்னால் உன்கூட வர முடியாது, இதுவே இயற்கையின் நியதி.” என்றவாறு என் கண் முன்னாலேயே என்னை விட்டுச் சென்றது.

அதே இடத்தில் உரைந்தவாறு சற்று சிந்திக்க ஆரம்பித்தேன். உண்மை தான், என் நிழல் என்பதற்காக கடைசி வரை என்கூடவே வரவேண்டும் என்று நான் எதிர்பார்க்க முடியாதே. இது தான் வாழ்க்கை, நாம் ஒளியில் நடக்கும் போது, சந்தோஷமாக வாழும் போது, ஆயிரம் பேர் எம்மோடு உடன் இருப்பர், நாம் அழைக்காமலே எம்மோடு வருவர். ஆனால் இருள், கஷ்டம் என்று வந்ததும் திரும்பிப்பார்த்தால் நாம் மட்டும் தான் தனியாக நிற்போம். இதுவும் இயற்கையின் நியதி தான் போல. இனியாவது நமக்கு நாம் மட்டும் தான் என்பதை உணர்ந்து, எதிர்பார்ப்புக்களை குறைத்து, யார் இருந்தாலும் இல்லாவிட்டாலும் என் வாழ்க்கையை நான் முழுமையாக வாழவேண்டும் என்ற எண்ணத்தோடு, ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக அனுபவித்து வாழ்வோம். இப்படி ஒரு முடிவோடு ஜோக்கிங்கை முடித்து வீடு திரும்பினேன். 

இந்த படைப்பை உருவாக்கியவர் சங்கீதா அன்டனி குமார். இவர் தொடர்ச்சியாக எழுத்துத்துறையில் தனது இருப்பை நிலை நாட்டிவருகின்ற இளம் எழுத்தாளராவர். இவரை பற்றிய மேலதிக விபரங்களை பெற்றுக்கொள்ள எம்மை தொடர்பு கொள்ளுங்கள்

மேலும் உங்களின் பதிவுகளும் எமது இணையத்தளத்தில் இடம் பெறவேண்டும் என விரும்பினால் இந்த தகவலை படியுங்கள்.

எங்களுடைய பதிவுகளை SMS இல் பெறுவதற்கு கீழே உங்கள் தொலைபேசி இலக்கத்தை பதிவுசெய்யுங்கள்

    எமது செய்திகளை உடனடியாக பெற்றுக்கொள்ள எமது வைபர் கம்யூனிட்டியுடன் இணையுங்கள்

    இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.

    Back to top button