fbpx

தூக்கி எறிந்த லாட்டரியில் விழுந்த ரூ.7.28 கோடி பரிசு பணம்..!

தூக்கி எறிந்த லாட்டரியில் விழுந்த ரூ.7.28 கோடி பரிசு பணம்..! பணத்துக்கு ஆசைப்படாது அதனை உரிமையாளரிடம் ஒப்படைத்த இந்திய வம்சாவளி

மெரிக்காவில் கீழே விழுந்து கிடந்த லாட்டரி மூலம் 7 கோடி ரூபாய் பரிசு கிடைத்தும், அதற்கு ஆசைப்படாத இந்திய வம்சாவளியை சேர்ந்தவர், அதனை உரிமையாளரிடம் கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.

மாசசூசெட்ஸ் நகரில் இந்திய வம்சாவளியான அருணா, நடத்திவரும் லாட்டரி கடையில், லியா ரோஸ் என்பவர் லாட்டரி சீட்டு வாங்குவது வழக்கம். அவரது நம்பருக்கு 7 கோடியே 28 லட்சம் ரூபாய் பரிசு கிடைத்துள்ளது.

ஆனால் முழுமையாக அந்த நம்பரை பார்க்காத லியா, அதனை கடையிலேயே தூக்கி எரிந்துவிட்டு சென்றுவிட்டார். அந்த சீட்டு, 10 நாட்களுக்கு பின் அருணாவின் மகன் அபிஷா கையில் கிடைத்தது.

அதற்கு பரிசு கிடைத்திருப்பது தெரிந்தும் அதனை தனதாக்கிக்கொள்ளாத அபிஷா, லியாவிடமே ஒப்படைத்தார். லியா அபிஷாவுக்கு நன்றி கூறியதுடன், அவரது நேர்மைக்கு பாராட்டுக்களையும் தெரிவித்தார்.

இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.

Back to top button