fbpx

இனிவரும் நாட்களில் மழை வீழ்ச்சி அதிகரிக்கும்

இலங்கையின் தென்கிழக்கு வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் அடுத்த 48 மணித்தியாலங்களில் மேலும் வலுப்பெறலாம் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனால், அடுத்த சில நாள்களில் நாட்டின் பல பகுதிகளில் மழைவீழ்ச்சி அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக இன்று பிற்பகல் வெளியிடப்பட்ட வானிலை முன்னறிவிப்பு தெரிவிக்கிறது.

“இலங்கையின் தென்கிழக்கில் நிலவும் குறைந்த வளிமண்டல குழப்ப நிலை அடுத்த 48 மணித்தியாலங்களில் மேலும் வளர்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே, நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழையுடனான வானிலை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கிழக்கு, ஊவா, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யும்.

பிற இடங்களில் பிற்பகல் அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

கிழக்கு, ஊவா, சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழையை எதிர்பார்க்கலாம்.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என்று வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Back to top button