
யாழில் தாக்குதலுக்கு இலக்கான இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
மது விருந்தில் ஏற்பட்ட கைக்கலப்பில் தாக்குதலுக்கு இலக்காகி யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கிளிநொச்சி உழவனூரை சேர்ந்த 28 வயதடைய செல்வக்குமார் ஜெகதீஷ்குமார் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கடந்த 31ஆம் திகதி எழுதுமட்டுவாழ் பகுதியில் உறவினர் வீடொன்றில் நடைபெற்ற நிகழ்வுக்கு , கிளிநொச்சியிலிருந்து மூவர் வருகை தந்துள்ளனர்.அந்நிகழ்வை தொடர்ந்து இடம்பெற்ற மது விருந்தில் கலந்து கொண்டுள்ளனர்.
இதன் போது எழுதுமட்டுவாழ் பகுதியை சேர்ந்தவர்களுக்கும் , கிளிநொச்சியில் இருந்து வருகை தந்தவர்களுக்கும் இடையில் போதையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டு கைக்கலப்பாக மாறியுள்ளது.
இதன்போது திடீர் உடல்நல குறைபாடு ஏற்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் (04.09.2023) அந்த நபர் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் கொடிகாம பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.