fbpx

முடக்கத்துக்கு மத்தியில் வீடுகளில் மோதல் – 150திற்கும் அதிகமானோர் வைத்தியசாலையில்!

கொரோனா தொற்று காரணமாக நாடு முடக்கப்பட்டுள்ள நிலையில், வீடுகளில் ஏற்பட்ட மோதல்கள் காரணமாக 150திற்கும் அதிகமானோர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வைத்தியசாலையின் அதிகாரியொருவர் செய்திப் பிரிவிற்கு இதனை உறுதிப்படுத்தினார்.

மேலும் இவ்வாறு காயமடைந்து, அனுமதிக்கப்பட்டவர்களில் ஆண்களே அதிகம் எனவும் அவர் தெரிவித்தார்.

அத்தோடு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 112 ஆண்கள், இவ்வாறான மோதல் சம்பவங்களினால் காயமடைந்து அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, வீட்டிற்குள் இடம்பெற்ற மோதல் சம்பவம் காரணமாக ஆண்ணொருவர் தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ள வண்ணம் உள்ளது.

இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.

Back to top button