
இலங்கையில் ஒரே நாளில் 40 பேருக்கு கொரோனா தொற்று!
இன்றைய திகதிப்படி(2020-6-24) இலங்கையில் COVID-19 தொற்றால் பீடிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1991 ஆக காணப்படுகின்றது.
அண்மைய நாட்களில் வைரஸ் பாசிட்டிவாக இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்தபோதும் 20, 21ம் திகதிகளில் தொற்றுக்குள்ளானவர்கள் எவரும் அடையாளம் காணப்படவில்லை. நேற்று முன்தினம் மாலைதீவிலிருந்து வந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டிருந்தது.
எனினும் நேற்று 40 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் இந்தியா, ஐக்கிய அமெரிக்காவில் இருந்து வந்தவர்களாவர்.
இதுவரையில் COVID-19 தொற்றுக்குள்ளானவர்கள் 432 பேர் வைத்தியசாலையில் பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.
இதுவரையில் 1548 பேர் குணமடைந்து வைத்தியசாலையை விட்டு வெளியேறியுள்ளனர். தற்போதுவரை 11 இறப்புகள் கொரோனா காரணமாக பதிவாகியுள்ளது.
எமது செய்திகளை உடனடியாக பெற்றுக்கொள்ள எமது வைபர் சமூகத்துடன் இணையுங்கள்