
யாழ்ப்பாணத்தில் ஒருவர் படுகொலை! கொலைக்கான காரணம் வெளியாகியது!!
யாழ்.பருத்துறை – அல்வாய் பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகளை ஆரம்பித்திருக்கின்றனர்.
உறவினர்களுக்கிடையில் பண கொடுக்கல் வாங்கல் விடயத்தில் ஏற்கனவே தர்க்கம் ஏற்பட்டிருந்ததாகவும், அதனால் இரு தரப்பிற்கிடையிலும் முறுகல் நிலை இருந்ததாகவும் கூறப்படுகின்றது.
இந்நிலையில் இன்றும் இரு தரப்பினருக்குமிடையில் உருவான வாய்த்தர்க்கம் மோதலாக மாறிய நிலையிலேயே சரமாரியான வாள்வெட்டு மோதல் இடம்பெற்றிருப்பதாக பொலிஸார் கூறியிருக்கின்றனர்.
மேலும் சம்பவத்தில் மு.கௌசிகள்(வயது31) என்ற 3 பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளதாக கூறியுள்ள பொலிஸார் சம்பவம் தொடர்பான தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுளதாக கூறியுள்ளனர்.
தற்போது சம்பவ இடத்தில் தடயவியல் பொலிஸார் ஆய்வுகளை நடத்திவரும் நிலையில் மறுபக்கம் பொலிஸார் குவிக்கப்பட்டு விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளதுடன்,
குற்றவாளிகளை கைது செய்வதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
எமது செய்திகளை உடனடியாக பெற்றுக்கொள்ள எமது வைபர் கம்யூனிட்டியுடன் இணையுங்கள்
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.