Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.

மீண்டும் மின் தடை! இன்று இறுதி முடிவு


நுரைச்சோலை நிலக்கரி அனல் மின் நிலையத்தை மீண்டும் தேசிய மின் அமைப்புடன் இணைக்கும் வரை மின்சாரத்தை தடையை நடைமுறைப்படுத்த வேண்டுமா, இல்லையா என்பது தொடர்பில் இன்று(10) தீர்மானிக்கப்படும் என்று இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெறவுள்ளது.

இன்றைய கலந்துரையாடலில் மின்வெட்டு இல்லாமல் மின்சார விநியோகத்தை நிர்வகிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து கவனம் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தநிலையில், கொழும்பின் சில பகுதிகளில் இன்றும் மின் தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு 13 உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளது.

இதேவேளை, நேற்றையதினம் காலை 11.15 மணி முதல் மாலை வரை நாடளாவிய ரீதியில் திடீர் மின் ஏற்பட்டதுடன், பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டிருந்தனர்.

இந்த நிலையில், எதிர்வரும் நாட்களிலும் கூட இவ்வாறு மின் தடை ஏற்படக் கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், இன்று மீண்டும் கொழும்பின் பல பகுதிகளில் மின் தடை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Back to top button