உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெறும் திகதி தொடர்பான அறிவிப்பு
உள்ளுராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 8ம் திகதி நடாத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடத்தும் திகதி தீர்மானிக்கப்பட உள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.எல் ஏ. ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.
இந்த தீர்ப்பின் பிரகாரம், அரசாங்கத்தின் நடவடிக்கைகளின் அடிப்படையில் தேர்தல் திகதி தீர்மானிக்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றம் எதிர்வரும் 5ம் திகதி கூடியதன் பின்னர் சபாநாயகர் தீர்மானத்தை அறிவிப்பார் எனவும் குறிப்பிடடுள்ளார்.
உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் கடந்த 2023ம் ஆண்டு மார்ச் மாதம் 9ம் திகதி நடைபெறவிருந்தது.
எனினும், போதியளவு நிதி ஒதுக்கீடுகள் இல்லாத காரணத்தினால் தேர்தல்கள் கால வரையறையின்றி ஒத்தி வைக்கப்பட்டது.
தேர்தல்களை கூடிய விரைவில் நடத்துமாறு உச்ச நீதிமன்றம் தேர்தல் ஆணைக்குழுவிற்கு உத்தரவிட்டிருந்தது.
அதன் பின்னர் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்களை ரத்து செய்து புதிதாக வேட்பு மனுக்களை கோருமாறு உச்ச நீதிமன்றில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கின் தீர்ப்பினை ஜனாதிபதிக்கும் நாடாளுமன்றிற்கும் உச்ச நீதிமன்றம் அனுப்பி வைத்துள்ளது.
எவ்வாறெனினும், உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 8ம் திகதி நடாத்துவதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.