fbpx

யாழ்ப்பாணத்தில் நீர்நிலையில் மூழ்கி பாடசாலை மாணவன் பரிதாபமாக பலி!

குளத்தில் குளிக்கச் சென்ற மாணவன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.வடமராட்சி, கரவெட்டி பகுதியில் இன்று (4) மாலை இந்த சோக சம்பவம் இடம்பெற்றது.

கரவெட்டி நுணுவில் பிள்ளையார் கோயிலடி பகுதியில் உள்ள குளத்தில் மாணவர்கள் சிலர் குளிக்கச் சென்றுள்ளனர். இதில் ஒரு மாணவன் நீரில் மூழ்கி காணாமல் போனார்.

இதையடுத்து, குளத்தில் நடத்தப்பட்ட தேடுதலில் மாணவன் சடலமாக மீட்கப்பட்டார். தாமரைக்கொடியில் சிக்கி சேற்றில் புதையுண்ட நிலையில் மாணவனின் சடலம் மீட்கப்பட்டது.

நெல்லியடி மத்திய கல்லூரியின் 2020 பொறியியல் தொழில்நுட்ப மாணவனான
தே.லக்சன் என்பவரே சடலமாக மீட்கப்பட்டார்.

எமது செய்திகளை உடனடியாக பெற்றுக்கொள்ள எமது வைபர் கம்யூனிட்டியுடன் இணையுங்கள்

இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.

Back to top button