
மட்டக்களப்பு விபத்தில் இளம் பெண் உட்பட இருவர் பலி!
மட்டக்களப்பு, வாழைச்சேனை -கொழும்பு பிரதான வீதியில் மியான்குளம் பகுதியில் இடம்பெற்ற மகிழுந்து விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர்.
குறித்த பகுதியில் பயணித்த மகிழுந்து வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி நேற்றிரவு விபத்துக்குள்ளானதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
விபத்தில் மகிழுந்தில் பயணித்த 31 வயதுடைய ஆண், பெண் இருவரும் உயிரிழந்தனர்.
சம்வம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை காவற்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
எமது செய்திகளை உடனடியாக பெற்றுக்கொள்ள எமது வைபர் கம்யூனிட்டியுடன் இணையுங்கள்
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.