
எதிர்வரும் 2 வாரங்களுக்கு அரச சேவையாளர்களை சேவைக்கு அழைப்பதை மட்டுப்படுத்த தீர்மானம்
எதிர்வரும் 2 வாரங்களுக்கு அரச சேவைகள் மற்றும் பாடசாலை கற்றல் நடவடிக்கைகளை ஒன்லைன் மூலம் மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இந்த நடைமுறை எதிர்வரும் திங்கட்கிழமை முதல் அமுலாகவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, எதிர்வரும் 2 வாரங்களுக்கு அரச சேவையாளர்களை சேவைக்கு அழைப்பதை மட்டுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அரச நிர்வாக அமைச்சினால் இதற்கான பிரத்தியேக சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளது.